கபடி போட்டி:முன்னாள் அமைச்சர் போட்டியை துவங்கி வைத்தார்!
1051 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீ பைரவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாளை முன்னிட்டு வெற்றி விநாயகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.மாபெரும் கபடி போட்டியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கி ஏழை எளிய 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் கொப்பம்பட்டி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.