கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்!
1031 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பூர் பகுதியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி 10-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் சிதம்பராபுரம் கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து கடம்பூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் வீராசாமி, கோடங்கால் கிளைச்செயலாளர் கருப்பசாமி, கோடங்கால் காலனி கிளைச் செயலாளர் அண்ணார், உள்ளிட்டோர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், எம்ஜிஆர் ஒன்றிய இணைச் செயலாளர் கடம்பூர் விஜி,கோபி, முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.