நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்
1045 views
Subscribe தூத்துக்குடி videosகடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர் தொடர்ந்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியை சே்ாந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில், கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த ஜெனிபர் (51). இவருக்கு சொந்தமான நாட்டு படகில் ஜெனிபர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி(62), எக்லிண்டன் (61), ஆரோக்கியம் (40) ஆகிய நான்கு பேரும் மே 11 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கு கடல் மீன் பிடிக்க சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும் , வெகு நேரம் ஆகியும் படகு திரும்பி வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த கீழ வைப்பார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல் குழுமத்தினருக்கும், மீனவர் நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கடந்த 12ம் தேதி காலை 9 மணிக்கு சுமார் 25 மைல் தூரத்தில் அவர்கள் சென்ற பைபர் படகு கவிழ்ந்து பைபர் படகின் மேலே தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை கடந்த 24 மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு அவர்களை வள்ளத்தில் கரைக்கு அழைத்து வந்தனர்.அவ்வாறு அழைத்து வரப்பட்ட மீனவர்கள், கடந்த 24 மணி நேரம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு மேல் சிகிச்சையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களிடம், இதுகுறித்து இது தொடர்பாக தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட படையின் உரிமையாளர் ஜெனிபர் கூறுகையில், கடந்த 24 மணி நேரமாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த எங்களை சக மீனவர்கள் மீட்டதாக தெரிவித்த அவர் இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான வலைகள் இஞ்சின்கள் படகுகள் முற்றிலும் இழந்துள்ளதால் அரசு எங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இதுகுறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா சங்கு குளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து கூறுகையில் தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்பொழுது சக மீனவர்கள் தான் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது என்ற நடவடிக்கை நடைபெற்று வருகிறது இதுகுறித்து அரசு கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் விபத்துகளின் போது அவர்களை மீட்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.