ஆட்சியர் அலுவலகத்தில் அதிக காசு வாங்கி கொண்டு மனு எழுதிகொடுப்பதாக புகார்!
1051 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிக காசு வாங்கி கொண்டு மனு எழுதிகொடுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதும் நபரகளை இலவசமாக மனு எழுதிக் கொடுக்க வேண்டும் அதற்கான என்ன தொகையே அதனை நான் தருகின்றேன் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மனு கொடுக்க வருகிறார்கள். இதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சிலர் மனு எழுதி கொடுத்து வருகிறார்கள். இதற்காக கூடுதல் பணம் கேட்பதாக அடிக்கடி புகார் வந்தது.இந்நிலையில் இன்று நடந்த மனுநீதி நாளில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக் கிணறு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவனைந்த பெருமாள் மனு கொடுக்க வந்தனர். அப்போது ஆட்சியரிடம் நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வருவதற்கு 100- ரூபாய் செலவு செய்து வருகிறோம். ஆனால் இங்கு மனு எழுதுவதற்கு 50- ரூபாய் கேட்கிறார்கள் என்று புகார் கூறினார்கள். இதை அறிந்த ஆட்சியர் செந்தில்ராஜ் உடனடியாக தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனு எழுதும் பெண்களிடம் வந்து விசாரணை நடத்தினார்.அப்போது அங்கே மனு எழுதி கொடுத்து கொண்டிருந்த சித்ரா தங்க புஷ்பம் என்ற பெண்"நான் ஒரு மனு எழுதுவதற்கு ரூபாய் 50- கேட்பேன். ஆனால் அவர்கள் 30- கொடுப்பார்கள் சில பேர் பணம் தராமல் போய் விடுவார்கள். நான் இதை வைத்து தான் எனது காலத்தை கழித்து வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவரிடம் "நீங்கள் இலவசமாக மனு எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை நானே கொடுத்து விடுகிறேன். இனிமேல் நீங்கள் மனு எழுவதற்கு பணம் வாங்கக்கூடாது. இலவசமாக எழுதிக் கொடுங்கள் என்றார் உடனடியாக அந்த பெண் யார் என்றே தெரியாமல் ஆட்சியர் உத்தரவை ஏற்றுகொண்டார் பின்னர் மாவட்ட ஆட்சியர்தான் தன்னிடம் பேசினார் என்று அறிந்த அந்த மனு எழுதும் பெண் ஆட்சியர் காலில் விழுந்து நீங்கள் கூறியபடி இலவசமாக இன்று முதல் மனு எழுதி கொடுக்கின்றேன் என்று ஆட்சியரிடம் கூறினார்.