சூசையப்பர் ஆலய திருவிழாவில் நடைபெற்ற சப்பரபவணியில் திரளானோர் பங்கேற்றனர்.
1050 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம்ஏரலில் 1914ம் ஆண்டு சூசையப்பருக்கு ஆலயம் கட்டப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த சூசையப்பர் ஆலயத் திருவிழா கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழா நாட்களில் தினமும் காலையில் நவநாள் திருப்பலியும் மாலையில் நற்கருணை ஆசிரும் நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையும் இரவு 9 மணிக்கு புனிதரின் சப்ரபாவணியும் நடைபெற்றது. சப்பரப்பவனியை முன்னிட்டு சப்பரத்தில் எழுந்தருளிய சூசையப்பர், ஏரல் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலியும் காலை 9:30 மணிக்கு புனிதரின் சப்பரப் பவனியும் நடைபெறுகிறது. திங்கள் கிழமை நன்றி திருப்பலியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ரவீந்திரன் மற்றும் அருள் சகோதரிகள் செய்து வருகின்றனர்.