இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது!
1020 views
Subscribe தூத்துக்குடி videosகன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.இந்திய கடல் பகுதிக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் 'வஜ்ரா'வில் சென்று கண்காணித்தனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றி வளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களையும், படகையும் தூத்துக்குடிக்கு கொண்டு வருகின்றனர்.இன்று தூத்துக்குடி தருவை குளம் மீன்பிடி துறைமுகத்தில்வந்து சேர்ந்தனர் .அந்த மீனவர்கள் உரிய விசாரணைக்கு பிறகு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகு, மீனவர்கள் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த விசைப்படகை இலங்கையை சேர்ந்த அண்டன் பெனில், விக்டர் இமானுவேல், ஆனந்தகுமார், ரஞ்சித்சிரன் லிபன் ஆண்டணி ஜெயராஜா ஆகிய 5 மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு படை கப்பல் வஜ்ரா பிடித்து தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டு வந்தது கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைப்பு விசைபடகு 150 கிலோ மீன் பறிமுதல் மத்திய உளவுப் பிரிவு, க்யூப் பிரிவு ,கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்களிடம் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்