தூத்துக்குடி மாவட்டம் காவல் நிலைய பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 எதிரிகள் கைது.
1011 views
Subscribe தூத்துக்குடி videosசிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தபால் தந்தி காலனி பகுதியைச் சேர்ந்த கோவில் மணி (63) என்பவரது மகன் சாமுவேல் விக்டர் (34) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மந்திரகுமார் (53) என்பவரின் மகளை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு வருடங்களாக தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சாமுவேல் குடும்பத்தினருக்கும் மந்திரகுமார் குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.