பத்ம ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10-வது நினைவு தினம் அனுசரிப்பு
1015 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி-யில் பத்ம ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10-வது நினைவு தினைத்தை-யொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.பத்திரிக்கை,கல்வி,விளையாட்டு, ஆன்மீகம் ஆகியவைகளில் சிறந்து விலங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10-வது ஆண்டு நினைவு தினைத்தை-யொட்டி தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் அருகே உள்ள காமராஜ் சிலை அருகில் தெட்சன மாற நாடார் சங்க முன்னால் நிர்வாகிகள் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட பத்ம ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் படத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக-வினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர் அதைபோல் அதிமுக சார்பில் முன்னால் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர் மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி,சமத்துவ மக்கள் கழகம்,உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் தெட்சன மாற நாடார் சங்க முன்னால் நிர்வாகிகள்,மற்றும் பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.