அரசு மருத்துவமனையில் தாகம் தீர்க்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் கருவி காட்சி பொருளாக உள்ளது நோயாளிகள் வேதனை!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2012 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் புறநோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர் உள் நோயாளிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளின் தாகம் தீர்க்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் கருவி காட்சி பொருளாக இயங்காமல் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ஐந்து சுத்திகரிக்கப்பட்ட கருவிகள் உள்ளது இந்த கருவிகள் அனைத்தும் செயல்படாமல் உள்ளதால் அங்கு வரும் ஏழை எளியோர் தண்ணீர் பாட்டிலை கடைகளில் விலை குடுத்து வாங்கும் நிலை உள்ளது இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு நிதியிலிருந்து வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கப்படும் கருவி வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்tamilnaduTimesXP TamilUpdated: 8 Jun 2023, 11:37 am - TimesXP Tamil
- tamilnadu
- Thirst-quenching Water Treatment Equipment Is A Display In The Government Hospital, Patients Are In Agony!