முதல் பாச சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
1071 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் , கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கன அடியும் , தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கன அடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி விதம் திறக்கப் பட உள்ளது தண்ணீர் திறப்பு :- தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,700 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது . இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை . முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இந்த 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளிலும் இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது . ஆண்டுதோறும் ஜூன் 1 - ஆம் தேதி முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம் .ஆனால் கடந்த சில வருடங்களாக முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 1 ஆம் தேதி வாக்கில் போதிய நீர் இருப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் ஜூன் 1 - ஆம் தேதி திறக்கப்பட வில்லை . மாறாக , ஜூலை , ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தான் திறக்கப்பட்டது . இதனால் இருபோக சாகுபடி செய்ய முடியாமல் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டது . இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் புதிய மழைப்பொழிவு பெய்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அணைப் பகுதியில் போதுமான மழை பெய்து போதிய நீர் இருப்பு இருந்ததால் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது . அதேபோல இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக ஜூன் 1 ஆம் தேதி நீர் திறக்கப்படுமா ? என்று விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் முதல் போக பாசனத்திற்காகவும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆளுநரின் ஆணைப்படி தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கனஅடி/வினாடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடி/விநாடி தண்ணீரையும் சேர்த்து 300 கன அடி/விநாடி தண்ணீரை 01.06.2023 முதல் 120 நாட்களுக்கு, தேவைக்கேற்ப, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பெரியாறு அணையிலிருந்து திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 300 கன அடி தண்ணீர்:- தேனி மாவட்டம் , கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கன அடியும் , தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கன அடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி விதம் திறக்கப் பட உள்ளது . இந்த நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கரும் , போடிவட்டத்தில் 488 ஏக்கரும் , தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும் என மொத்தம் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதுதேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் , கூட்டுறவுத்துறை அமைச்சர் .ஐ.பெரியசாமி அவர்களால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா . ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் . மகாராஜன் , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் K.S. சரவணக்குமார் , மதுரை பொதுப்பணித்துறை பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்புப்பொறியாளர் எம்.சுகுமார் ,தங்க தமிழ்செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்