வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா-அத்தி மரத்திலிருந்து வெட்டப்பட்ட முக்கம்பம் செதுக்கப்பட்டது!
1134 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது.இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் மா விளக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வர்.இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக கோவில் பிரகாரத்தின் முன்பு கம்பம் நடும் விழா நாளை நடைபெறுகிறது.இங்கு வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாக திருவிழாவிற்காக நடப்படும் கம்பம் எந்த திசையில் உள்ளது என்பதை அம்மனிடம் கேட்டு கிராம மக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி தேனி வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள அத்தி மரத்திலிருந்து கம்பத்திற்கான மரம் வெட்டப்பட்டு முக்கம்பம் வடிவத்தில் சரியான அளவில் கம்பம் செதுக்கப்பட்டது.பின்னர் செதுக்கப்பட்ட கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமமிட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.நாளை அதிகாலை 4 மணி அளவில் முல்லைப் பெரியாற்றில் கம்பம் இறக்கப்பட்டு ஊருக்குள்ளே இருக்கும் கோயில் வீட்டில் இருந்து அம்மன் வந்த பிற்பாடு கம்பத்திற்கு ஈஸ்வரன் கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.இதனைத் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி மேள தாளங்கள் முழங்க கம்பம் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் சன்னதியின் முன்பு பக்தர்களின் வழிபாட்டிற்காக திருக்கம்பம் நடப்படும்.கம்பம் நடப்பட்ட 22 நாட்களுக்கு பிறகு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கௌமாரியம்மன் பல்வேறு அலங்காரத்திலும் திருத் தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.