வைகை அணையில் இருந்து மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 6099 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் கூடியதால் தற்போது பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.