தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா!
தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை திருத்தேர் பவனி துவங்கியது. நான்கு நாட்கள் நடந்த திருத்தோ தேர்பவனி, ஒவ்வொரு நாளும் கோவிலின் நான்கு வாசல் வழியாக கோவிலைச் சுற்றி திங்கட்கிழமை நிலைக்கு வந்தது.நான்கு நாட்களும் கருநீலப் பட்டுடுத்தி அருள் பாலித்த அம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடந்த எட்டு நாட்களாக இரவு பகலாக பக்தர்கள் நேர்த்திக்கடன், வழிபாடு என கூட்டம் மொய்க்க களை கட்டிய தேனி வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.நிறைவு நாளான செவ்வாய்கிழமை தேனி மற்றும் சுற்றுப்பட்டி கிராம மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.வியாபரக் கடைகளிலும் பரபரப்பு இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியது.theniTimesXP TamilUpdated: 17 May 2023, 1:04 pm