நிழற்குடை சிதிலமடைந்து இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயம்!
1047 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி வைகை அணை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிர் புறம் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிழற்குடை தற்போது சிதிலமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது இதனால் சிதிலமடைந்து காணப்படும் நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு பெரிதும் அச்சமடைந்து வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்தும் கூடாரமாக மாற்றி சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் எனவே சிதிலமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ள நிழற்குடை இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு முன்பு உடனடியாக அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நிழற்குடையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நிழற்குடையை பயன்படுத்துகின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்