ஆண்டிபட்டி அருகே தனியாக நின்று கடையே இல்லாமல் மதுபாட்டில்கள் விற்றவர் கைது!
1089 views
Subscribe தேனி videosதேனிமாவட்டம் ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை சாலையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் வந்தது இதையடுத்து ஆண்டிபட்டி சப் இன்ஸ்பக்டர் சுமதி தலைமையிலான போலீசார் புள்ளிமான் கோம்பை சாலையில் திடீர் ரோந்தில் ஈடுபட்டு சோதனை செய்தனர் அப்போது அரசு டாஸ்மார்க் கடை அருகே தனி ஆளாக நின்று கொண்டு கடையே இல்லாமல் மது பாட்டில்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர் விசாரணையில் அவர் கொண்டம நாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த வேல்ராஜ் என்பது தெரியவந்தது இதையடுத்து அவரிடம் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 106 மது பாட்டில்களை ஆண்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்து வேல் ராஜை கைது செய்தனர்