ஆறு மாதங்களாக அரசு பணிமனை முன்பு காத்துக் கிடக்கும் நடத்துனர்
1040 views
Subscribe தேனி videosபெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் 28 ஆண்டுகள் பணியாற்றி உடல்நிலை குறைவு ஏற்பட்டு ஒரு காலை இழந்து மாற்று வேலைக்காரி ஆறு மாதங்களாக அரசு பணிமனை முன்பு காத்துக் கிடக்கும் நடத்துனர் அழகர்சாமியின் அவல நிலை கண்டுகொள்ளாத அரசு போக்குவரத்து கழகம் நிர்வாகம் காலை இழந்து கண்ணீரோடு நிற்கும் அழகர்சாமி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி 55 வயது என்பவர் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராகப் பணிக்கு சேர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசித்ரா என்பவரை திருமணம் முடித்து இவர்களுக்கு நாக தாரணி 25 வயது ராஜ ஜனனி 23 வயது ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் இவர்கள் இருவரையும் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டு தனித்தனியே வசித்து வருகின்றனர் இந்நிலையில் பேரக்குழந்தைகளுடன் அழகர்சாமியும் அவரது மனைவி ஜெயசித்ராவும் வசித்து வருகின்றனர்இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்துனர் அழகர்சாமிக்கு நீரழிவு நோய் ஏற்பட்டு அவரது வலது கால் முட்டிற்கு கீழே அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு முழங்கால் வரை அகற்றப்பட்டது இந்நிலையில் நடக்க முடியாத அழகர்சாமி தற்போது செயற்கை கால் கால் உதவியுடன் தற்போது வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் தான் 28 வருடங்களாக பணியாற்றிய இன்னும் மூன்றாண்டுகள் பணியில் இருக்கும் நிலையில் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் மாற்று வேலை கோரி ஆறு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் போக்குவரத்து கழகம பொது மேலாளர் இடம் மனு அளித்துள்ளார் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகின்றனர் இதனால் தினமும் காலையில் தாமரைக் குளம் பகுதியில் இருந்து கிளம்பி பெரியகுளம் போக்குவரத்து பணிமனைக்கு வந்து மாற்று வேலை குறித்து திண்டுக்கல் கோட்டம் போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்து விட்டதா என்று தினந்தோறும் நாள் தவறினாலும் அழகர்சாமியின் வருகை தருவதில்லை இந்நிலையில் அவருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அழகர்சாமி தற்போது மருத்துவ செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடன் மற்றும் வீட்டின் செலவிற்காக எந்தவித வருமானமும் இன்றி சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார் இதுகுறித்து பல முறை பெரியகுளம் கிளை மேலாளர் இடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அழகர்சாமி மற்றும் அவரது மனைவி தான் வளர்த்து வரும் பேரக்குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது எனவே அழகர்சாமி என்பவருக்கு தமிழக அரசு உடனடியாக அவருக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து அவரது வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்மேலும் இதுகுறித்து அழகர்சாமி கூறுகையில் நான் கடந்த 28 ஆண்டுகளாக தமிழ்நாடு போக்குவரத்து பணிமனை பெரியகுளம் கிளையில் நடத்துனராக பணியாற்றியுள்ளேன் இந்நிலையில் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு வலது கால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது ஆறு மாதங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறேன் எனக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என பல்வேறு முறை திண்டுக்கல் போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மனு அளிக்கும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறேன் மருத்துவச் செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடன் மற்றும் குடும்பச் செலவிற்காக எந்த ஒரு வருமானமும் இன்றி மிகுந்த சிரமத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வாழ்ந்து வருவதாக கண்ணீர் மல்க தன் வேதனை கூறி வருகிறார் எனவே தமிழக முதல்வர் அவரின் நிலை உணர்ந்து அவருக்கு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்மேலும் என்னதான் அரசு வேலையில் இருந்தாலும் நோய் தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகளை இழக்கும் பொழுது ஒரு மனிதன் தான் பெற்ற தைரியத்தை இழந்து வாழ்க்கையை ஒரு கேள்விக்குறியாகும் நிலையில் தான் பணியாற்றிய நிறுவனத்தால் கிடைக்கக்கூடிய பணிகள் மட்டுமே அவருக்கு பெரும் உதவியாக இருந்து இருக்க முடியும் இந்நிலையில் 28 ஆண்டுகள் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றிய ஒரு நடத்துனருக்கு ஒரு காலை இழந்து கடன் தொல்லைக்கு ஆளாகி இருக்கும் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் மாற்று வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது சக ஊழியர்கள் இடையே மிகுந்த வேதனையும் தன்னம்பிக்கையும் இழக்கச் செய்துள்ளது இனிவரும் காலங்களில் இதுபோன்று பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தேவைப்படுகிற உதவிகளை செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் உடல் உறுப்புக்களை இழந்து மனதால் தளர்வடைந்திருக்கும் அழகர்சாமி போன்ற போன்ற நபர்கள் வைக்கும் கோரிக்கை அரசு உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே சக ஊழியரின் கோரிக்கையாய் உள்ளது