அரிகொம்பன் யானை தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது!
1039 views
சப்ஸ்கிரைப் theni வீடியோஸ்தேனி மாவட்டம் மேகமலை கோட்டத்திருக்கு உட்பட்ட கூத்தனாட்சி காப்பு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையானது இன்றைய நிலையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள எரசக்கநாயக்கனூர் காப்புவனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளது.மேலும், மேற்கண்ட யானையினை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏதுவாக 5 நபர்கள் அடங்கிய தேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் மூன்று கும்கி யானைகள் கம்பம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. கும்கி யானைகள் தற்போது கம்பம் வனச்சரக அலுவலக வாளகத்தினுள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரிக்கொம்பன் யானையினை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவானது வனத்துறை அலுவலர்கள் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை மற்றும் யானை தடம் கண்காணிப்பாளர்கள் அடங்கிய 85 நபர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் வனப்பகுதிக்குள் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அரிக்கொம்பன் யானையானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு தற்போது வெகு தொலைவில் உள்ளது. இருப்பினும், அரிக்கொம்பன் யானையானது மீண்டும் ஊருக்குள் திரும்பி வரநேரும் நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாமலிருக்க கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய நடவடிக்கைகளை வழக்கம் போல் மேற்கொள்ளலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், அரிக்கொம்பன் யானை பல இடங்களில் உலாவருவதுபோல தவறான மற்றும் சம்பந்தமில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்த்திடவும், தவிர்க்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.அரிக்கொம்பன் யானையினை பிடிக்க மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவுபெறும் வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.