தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழி குழு ஆய்வு
1150 views
Subscribe தேனி videosதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகுழு தலைவர் சட்டமன்றஉறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்கள் (பன்ருட்டி) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் இன்று தேனி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் மேற்கொண்டு வருகின்றனர்.இதில் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட முன்சீப் நீதிமன்ற கட்டிடத்தை ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து புணரமைப்பது குறித்து செய்யப்படும் வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆய்வு குழுவினர் கட்டிடத்தை சீரமைப்பதற்காக செய்யப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும் சீரமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும் பணியை எவ்வளவு நாட்களுக்குள் செய்து முடிக்க முடியும் என்பது குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போதுதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான உறுதி மொழி குழுதலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன்அவர்கள் (பன்ருட்டி) தலைமையில், குழு உறுப்பினர்களான 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் நகர மன்ற தலைவர் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்