தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு!
1027 views
Subscribe தேனி videosதென் மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு நீர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பொறியியல் தொழில்நுட்பத்தில் அனைவராலும் பாராட்டப்படும் முல்லைப் பெரியாறு அணை, உலகின் தலைச்சிறந்த கட்டுமானமாக பார்க்கப்படுகிறது. இந்த அணையின் நீர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மதுரையை சுற்றியுள்ள கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்கள் பயன் பெறுகின்றன.தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய வழக்கமான பணிகள் குறித்தும், துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய நிர்வாக ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் தேக்கடி படகுத் துறையில் இருந்து படகுகள் மூலம் தமிழக, கேரளா அதிகாரிகளுடன் அணை பகுதிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளனர். இந்த ஆய்வில் ஷட்டர் பகுதி, கேலரி பகுதி மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்