டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் டெங்கு முதிர் கொசு புகை மருந்து அடிப்பதற்காக நகராட்சி ஆணையாளர் புனிதன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசு பரவலை தடுத்து ஒழிப்பதற்காக டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் டெங்கு கொசுக்கள் காலை மாலை இருவேளையும்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மனிதனைத் தாக்கி மனித உடலில் கடித்து ரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொண்டு அதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்புகிறது மற்ற கொசுக்களைப் போல எல்லா நேரமும் வெளியில் வருவதில்லை இந்த வகையான டெங்கு கொசுக்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளி வருகிறது இது இருட்டான இடங்களில் தங்கிக் கொண்டு காலை நேரத்திலும் மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் வெளியேறி வருகிறது அந்த நேரத்தில் அதற்குத் தேவையான மனித உடலில் இருந்து உணவு எடுத்துக் கொண்டு இருட்டாக இருக்கக்கூடிய பகுதியில் மறைந்து கொள்கிறது எனவே டெங்கு கொசுக்களை அழிப்பதற்காக அந்த குறிப்பிட்ட நேரத்தில் புகை மருந்து அடிப்பதால் டெங்கு கொசுக்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மனித உடம்பில் தாக்கி உணவு எடுக்கின்ற மற்றும் மனித ரத்தத்தில் டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற செயல்பாட்டில் ஈடுபட முடியாமல் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதனுடைய முழு செயல்பாடும் குறைந்து விடுகிறது இதனால் அது உணவு எடுக்காமல் அப்படியே இறந்து மடிகிறது மேலும் டெங்கு கொசுவின் செயல்பாடு குறைகிறது இதனால் டெங்கு காய்ச்சல் பரவலை முற்றிலுமாக தடுப்பதற்கான முழு முயற்சியாக பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது சேகர் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.கடந்த மூன்று மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழுகின்ற பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து இருப்பதோடு மேலும் டெங்கு காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து டெங்கு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்இதன் ஒரு பகுதியாக இன்று பெரியகுளம் வடகரை நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வணிக நிறுவனங்கள் இருக்கக்கூடிய பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர் இதனால் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து டெங்கு கொசு பரவாமல் இருப்பதற்காக முழு முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் படியில் தீவிரம் காட்டி செயல்படுத்திய பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்theniTimesXP TamilUpdated: 10 May 2023, 11:43 am