சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலாப் பணிகள் ஏமாற்றம்!
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இறை வழிபாட்டுத் தலமாகவும் உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்த குளித்து மகிழ்வது வழக்கம்.இந்நிலையில் கோடை கால விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்பொழுது மேகமலை பகுதியில் கோடை காலம் தொடங்கியதால் சுருளி அருவிக்கு நீர் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதனால் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆனந்த குளியலுக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதற்கு சிரமம் அடைவது பெரிதும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. சுருளி அருவிக்கு கோடைகால விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏமாற்றத்துடன் செல்வதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.theniTimesXP TamilUpdated: 25 Apr 2023, 12:16 pm