நீரில் மிதக்கும் முயற்ச்சியில் சிறுமியின் உலக சாதனைதேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ரவிக்குமார்- சுபித்க்ஷா தம்பதியரின் மகள் டைஷா அங்குள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே நீச்சல் கற்றுக் கொள்வதில் சிறுமியிடம் அதிக ஆர்வம் இருப்பதை அறிந்த அவரது பெற்றோர்கள் சிறுமியை தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் சேர்த்தனர்.தனது இரண்டு வயது முதல் நீச்சல் பழகி வந்த சிறுமி உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாது தண்ணீரில் மிதக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம் என்ற அமைப்பினரின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியின் முடிவில் தொடர்ந்து 4 மணி நேரம் 18 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சிறுமி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதற்கு முன்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒரு மணி நேரம் நீரில் மிதந்தது சாதனையாக இருந்த நிலையில் அதனை முறியடித்த சிறுமி டைசாவிற்கு யுனிவர்சல் ரெக்கார்டு ஃபோரம் என்ற அமைப்பின் சார்பில் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.