ஆண்டிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட ஐந்து மதுபான பார்கள் சீலிட்டு மூடப்பட்டது!
1032 views
Subscribe தேனி videosஆண்டிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட ஐந்து மதுபான பார்கள் சீலிட்டு மூடப்பட்டது.குதிகளில் சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன இப்புகார்கள் குறித்து காவல்துறையினரும் அவ்வப்போது திடீர் சோதனை செய்து விரோதமாக செயல்பட்ட மதுபானக் பார்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர் தமிழகத்தில் மரக்காணம் தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்தும் /சட்ட விரோதமாக செயல்படும் மதுபான பார்களில் மது குடித்தும் பலர் பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளது இதையடுத்து தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் சட்டவிரோத மதுபான பார்களை மூடவும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது இதையடுத்து இன்று காவல்துறையினர் ஆண்டிபட்டி பகுதியில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மூலக்கடை வருசநாடு குமணன்தொழு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர் இதில் ஐந்து இடங்களிலும் அரசு மதுபான கடையை ஒட்டி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது உடனடியாக சட்ட விரோதமாக செயல்பட்ட ஐந்து பார்களுக்கும் காவல்துறையினர் சீல் வைத்து மூடினார்கள் காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது