தனியார் கல்குவாரி நிறுவனம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!
1036 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்வலையபட்டி கிராமத்தினர் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமுறை தலைமுறையாக மாணவரி விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்இந்நிலையில் தங்களது நிலத்தை ஒட்டியுள்ள கேகே ப்ளூ மெட்டல் கல்குவாரி நிறுவனம் இது தங்களுடைய நிலம் என்று இதை நாங்கள் வாங்கி விட்டதாக கூறி இதில் யாரும் விவசாயம் செய்ய கூடாது என்று எங்களை மிரட்டி வெளியேற சொல்வதாக குற்றம் சாட்டினர் இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தும் இதுவரை எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்இந்நிலையில் நேற்று விவசாயம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் போது கல்குவாரி நிறுவன உரிமையாளர்கள் எங்களை மிரட்டி வெளியே செல்லும் படி கூறினார்கள்அப்போது விவசாய நிலம் அருகே நாங்கள் அமைத்த கூரைகளை இரவோடு இரவாக தீ வைத்து எரித்து விட்டனர் என்று கண்ணீர் மல்க விவசாயி தெரிவித்தனர்எனவே தனியார் கல்குவாரி நிறுவனத்திடம் இருந்து எங்களை நிலத்தை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்