ஆசிரியருக்கு பாதபூஜை செய்து பிரியாவிடை கொடுத்த முன்னாள் மாணவர்கள்
ஆசிரியருக்கு பாதபூஜை செய்து பிரியாவிடை கொடுத்த முன்னாள் மாணவர்கள்
ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியரின் பணி நிறைவை அடுத்து தலைமை ஆசிரியருக்கு பூரண கும்ப மரியாதை செய்து பாதபூஜை செய்த முன்னாள் மாணவர்கள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சண்முகசுந்தரபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறதுஇப்பள்ளியில் தலைமை ஆசிரிரியர் திருமதி கல்யாணி கடந்த 28 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்இவர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறுவதை அடுத்து அரசு பள்ளியின் கடைசி வேலை நாளான இன்று இவரது சேவையை பாராட்டி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த பணிநிறைவு மற்றும் பாராட்டு விழா பள்ளியிலேயே நடைபெற்றதுதான் பணிக்கு சேர்ந்தது முதல் கடமை உணர்வுடனும் , சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடன் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத்தந்து கிராம மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்தலைமை ஆசிரியர் கல்யாணிஇவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் முன்னணி நிறுவனங்களிலும் வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்இவர் பணி நிறைவு பெறுவதை ஒட்டி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து இன்று பணி நிறைவு விழாவை அரசுபள்ளி கடைசி வேலை நாளான இன்று சிறப்பாக நடத்தினார்கள்இதற்காக பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கல்யாணிக்கு மலர் மாலை அணிவித்து வெற்றித் தலைப்பாகை சூடி பள்ளிக்குள் அழைத்து வந்தனர்அப்போது ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மாணவர்கள் தங்கள் கைகளில் இருந்து மலர்களை தூவியும் கரகோஷம் எழுப்பியும் மழலை மொழியில் ஆரவாரம் செய்தும் அவரை வரவேற்றனர்மேலும் தங்களது நன்றிக்கடனை தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கும் விதமாக முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் பாதங்களை ஒரு பலகையில் வைத்துதண்ணீர் ஊற்றிக்கழுவி பாதபூஜை நடத்தினார்கள் இதையடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கிராம முக்கிய பிரமுகர்களும் பெற்றோர்களும் சக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரின் கல்விச் சேவையை பாராட்டி பேசினார்கள்இதன் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் திரைப்பட பாடல்மெட்டில் பாராட்டுக்கவிதையை தயாரித்து வாசித்துக் காட்டியது அனைவரையும் கவர்ந்ததுஇறுதியாக பேசிய தலைமை ஆசிரியர் கல்யாணி விருப்பமே இல்லாமல் இந்த ஆசிரியர் பணிக்கு வந்தது முதல் இன்று வரை மிகவும் விரும்ப பெற்று ஆசிரியர் பணியை செய்து வந்ததாகவும் ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடனும் உண்மையான உள்ளத்துடனும் கடமை உணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் தங்கள் குழந்தைகளை போல் மாணவர்களையும் எண்ணி கல்விச்சேவை புரியவேண்டும் என்றும் பேசினார் நிகழ்ச்சியின் இடையில் தலைமை ஆசிரியரை பிரிய மனமின்றி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் சிலர் தேம்பி அழுதனர் விழாவில் ஆண்டிபட்டி கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்Updated: 28 Apr 2023, 7:27 pm