தொடர் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு!
1200 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கோம்பைதொழு அருகே அமைந்துள்ளது மேகமலை அருவி .நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் இந்த அருவி வறண்டு போனது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு செல்லும் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் மேகமலை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மீண்டும் மேகமலை அருவிக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்