சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
1062 views
Subscribe தேனி videosதமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் காலை உணவு மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்குவதை கைவிட்டு அந்தத் திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் காலை உணவு திட்டத்தை வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.