கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் தடை!
1452 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேலும் கும்பக்கரை அருவி.கடந்த மாதம் இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கும்பக்கரை அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்லவும் குளிப்பதற்கும் தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்தனர்.இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து பகல் மட்டும் இரவு நேரங்களில் கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 6வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கும் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார்.மேலும் மேற்கு தொடர்ச்சி மலை கும்பக்கரை அருவிப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து வெள்ள வரத்து குறித்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.