காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சாலை மறியல்!
1109 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட்டை செயல்படவா விடாமல் முடக்கும் வகையில் பாதையினை மறைத்து பெரிய அளவிலான பேனர்கள் வைத்து சாக்கடை கழிவுகளை மக்கள் நடமாடும் பகுதியில் கொட்டி புதிதாக பேருந்து நிலையம் அருகாமையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு செல்ல மறைமுகமாக வலியுறுத்தி நகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் போடி திருவள்ளூர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போராட்டக்காரர்களிடம் இருசக்கர வாகனத்தினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பான சூழ்நிலையில் போடி பகுதியில் நிலவி வருகிறது.காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.