பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஏழைப் பெண்களிடம் லஞ்சம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் மீது புகார்!
1326 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனை நூறு ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும் இந்த மருத்துவமனைக்கு பெரியகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியான 20 மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர் இந்நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்த இளமதி என்ற தாய் தனது மகள் சிபி பெட்டிஷிய 20 வயது என்ற பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்துள்ளார் அப்போது ஆரம்பத்தில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு கட்டத்தில் குழந்தை சுகப்பிரசவம் அடைவதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறிய நிலையில் பதறிப் போன தாய் இளமதி தனது மகள் மற்றும் பிறக்கப் போகும் குழந்தையின் உயிரைப் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார் இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிபி பெட்டிஷியா என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததுஇந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பெண்ணிடம் அறுவை சிகிச்சை இல் ஈடுபட்ட மருத்துவர் செவிலியர் கண்காணிப்பாளர் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி கையூடாக 2000 ரூபாய் பெற்றது மட்டுமல்லாது அறுவை சிகிச்சை செய்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் எடுத்து செல்வதற்கு 800 ரூபாய் உடை மாற்றுவதற்கு 300 ரூபாய் மருந்து கட்டுவதற்கு 100 ரூபாய் நல்ல படுக்கை வழங்குவதற்கு 100 ரூபாய் கூடுதல் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஆயிரம் ரூபாய் எனக் கூறி சிசிச்சைக்கு தகுந்தாற் போல் தரவாரியாக படிப்படியாக பட்டியலிட்டு கையூட்டு வாங்கி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்மேலும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வருகிற பெரும்பாலான பெண்களிடம் சுகப்பிரசவம் இன்றி அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை தாயும் காப்பாற்ற முடியும் என ஒரு பொய்யான வதந்தியை பரப்பி பெற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அறுவை சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்து பின்பு அறுவை சிகிச்சை செய்வதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது இதனால் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள் மிகுந்த அச்சத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளாகி வருவதாக கூறுகின்றனர் மேலும்பத்து மாதம் தன் குழந்தையை வயிற்றில் சுமந்து பாதுகாத்து வளர்த்து பெற்றெடுக்கும் நிலையில் ஒரு தாயின் வேதனையை உணராத மருத்துவமனை நிர்வாகம் பிரசவத்தை காரணம் காட்டி தாய்மார்களை மிரட்டி கையூட்டு வாங்குவது பெரியகுளம் மருத்துவமனையின் தொடர்கதையாய் வருகிறது இந்த அவல நிலையை போக்க தேனி மாவட்ட மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து கையூட்டு கொடுத்தால் தான் மருத்துவம் அளிப்போம் என கூறிய மருத்துவர் செவிலியர் மற்றும் தின கூலி பணியாளர்கள் அனைவரையும் விசாரணை செய்து இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவத்திற்கு வருகிற ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே மருத்துவமனைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வருகின்ற பொதுமக்களின் கோரிக்கையாய் உள்ளதுமேலும் இது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது