மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ப்ரெய்லி ரீடர் எந்திரம் வழங்கிய ஆட்சியர்
1031 views
Subscribe தேனி videosதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் குறைதீர் முகாமில் பார்வையற்ற மூன்று மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடர் எந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு முகாம் நடந்தது.முகாமில் பங்கேற்ற ஆட்சியர் சஜீவனா, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.கடந்த குறைதீர் முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மூன்று பார்வையற்ற மாணவர்களுக்கு தலா 35, 500 ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடர் இயந்திரங்களை வழங்கினார்.தொடர்ந்து நடந்த பொதுமக்கள் குறைவு முகாம் மூலம் பல்வேறு உதவித்தொகைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 177 மனுக்கள் பெறப்பட்டன.