யானை மீது கார் மோதியதில் நான்கு பேர் படுகாயம்
1011 views
Subscribe தேனி videosயானை மீது கார் மோதிய பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.தமிழக-கேரள மாநில எல்லை பகுதியான போடிமெட்டு அருகே உள்ள கேரள பகுதியான தோண்டிமலை என்ற பகுதியில் சக்ககொம்பன் என்ற காட்டு யானை நாள்தோறும் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.வழக்கம்போல நேற்று நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், தேனி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது.அப்போது கேரளாவின் பூப்பாறை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் நடு ரோட்டில் நின்றிருந்த யானை மீது அசுர வேகத்தில் மோதியது.இந்த விபத்தில் காரில் பயணித்த போடிமெட்டு அருகே உள்ள சுண்டலைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் அவரது உறவினர்களான கிருபாகரன் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கார் தனது மீது மோதியதில் ஆத்திரம் அடைந்த யானை காரின் முன் பகுதி மற்றும் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு யானையை விரட்டி அடித்தனர்.அதன் பின்னர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு ராஜகுமாரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நான்கு பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த யானை மீது கார் மோதி நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சம்பவம் தமிழக கேரள எல்லை பகுதியான போடிமெட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.