மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதால் அரசு மேல் நிலைப் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்!
1053 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம், அல்லி நகரம் அரசு மேல் நிலைப் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயிற்று வருகின்றனர்.இந்தாண்டு சுமார் 80 மாணவ, மாணவிகளை மாற்று சான்றிதழ்களை வாங்கி வேறு பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து இன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் தேனி - பெரியகுளம் சாலையில் அல்லிநகரம் அரசு மேல் நிலைப் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அல்லி நகரம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.