உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் முன்னிட்டு விழிப்புணர்வு!
1027 views
Subscribe தேனி videosகுழந்தைகளின் இயல்பான உரிமைகளை நினைவுபடுத்தி, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வை உலகமெங்கும் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடையே குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டு துவக்கி வைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.