சிறப்பாக தேர்வு எழுதி முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.இதில் சிறப்பாக தேர்வு எழுதி முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது.தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதி முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் பத்தாம் வகுப்பு மாணவி ஹேம நிஷா 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளி அளவிலும் தேனி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.அதேபோல் லோகேஸ்வரன் என்ற மாணவன் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை செய்தனர்.இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அவர்களது பெற்றோரை அழைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.அதேபோல் பதினோராம் வகுப்பிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பள்ளி நிர்வாகம் பாராட்டியது.மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதால் சிறப்பாக பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்வி நிறுவனங்களின் தலைவர் டி ராஜமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினர்.theniTimesXP TamilUpdated: 20 May 2023, 4:47 pm