தேனி மாவட்ட தலைமை மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு.!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்திய மருத்துவ தரகட்டுப்பாட்டு மருத்துவ குழுவினர் மருத்துவமனையின் தரம் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு புறக்காவல் நிலையம் இடம் பெற வேண்டும் என்ற விதி பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து ஆய்வு குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இது நடைபெறையில் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவக் கழகம் உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனையின் நுழைவாயிலின் முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இன்று பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.மேலும் புறக்காவல் நிலையம் திறப்பிற்கு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் குமார் மற்றும் மருத்துவமனை நிலைய மருத்துவர் ராஜேஷ் மற்றும் பெரியகுளம் வடகரை தென்கரை மற்றும் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.theniTimesXP TamilUpdated: 17 May 2023, 1:28 pm