நேரு யுவா கேந்திரா சார்பில் "மகா உட்சவ் 2023" என்ற தலைப்பில் நடைபெற்ற இளையோர் கலாச்சார விழா!
1037 views
சப்ஸ்கிரைப் theni வீடியோஸ்தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவா கேந்திரா நடத்திய இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதில் தற்போதையஇளைஞர்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும்,ஒன்றுபட்ட இளைஞர் சக்தியை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட இளைஞர்கள் நலன் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் மத்திய அரசு இளைஞர்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள்,பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டி மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.பின்னர் பல்வேறு கிராமங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 15 இளைஞர் நற்பணி மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.முன்னதாக அரசின் நலத்திட்டங்கள், சிறுதானிய உணவு வகைகளின் முக்கியத்துவம்,குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை விளக்கும் அரங்குகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓபி.ரவீந்திரநாத் மன்னர்களின் ஆட்சி முறை தமிழர்களின் கலாச்சாரமான செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்து தமிழுக்குப் பெருமை சேர்த்தது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார்.இந்த நிகழ்ச்சியில் நேரு யுவா கேந்திராவின் துனை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்