62 ஆண்டு அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டி!
1031 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அமரர் பிடி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பை 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியின் நான்காவது நாளாக இன்று நடைபெற்றது இதில் முன்னதாக முதல் போட்டியில் புதுடெல்லி ஓ என் ஜி சி அணியும் புனே கஸ்டம்ஸ் அணியும் மோதியதில் புனே கஸ்டம்ஸ் அணி 66க்கு 59 என்ற புள்ளிக் பெற்று வெற்றி இதனை தொடர்ந்து.இரண்டாவது நடைபெற்ற போட்டி தமிழ்நாடு சிறப்பு காவல்துறை அணியும் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடி தில் பேங்க் ஆப் பரோடா அணி 82 க்கு 60 என்ற புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது மேலும் மூன்றாவது போட்டியில் கேரளா காவல்துறை அணியும் இந்திய கப்பல் படை லோனோ வாலா அணியும் மோதியதில் இந்திய கப்பல் படை லோனோ வாலா அணி 79க்கு 75 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று. இன்று நடைபெற்ற நாக்அவுட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் லீக் சுற்றிக்கு தகுதிபெற்றது மேலும் நாளை முதல் லீக் சுற்றுபோட்டிகள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடதக்கது நான்காவது நாள் கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார் மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் உடன் திமுக பெரியகுளம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடைப்பந்தாட்ட போட்டியை கண்டு களித்தனர் மேலும் கொடிப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால் போட்டி சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்து கூடைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.