62 வது அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டி!
1028 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி 15ம் தேதி துவங்கியது. மேலும் இந்த போட்டியானது நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மற்றும் இரவு மின்னொளியில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணியும் புதுடெல்லி இந்திய ரயில்வே அணியும் மோதின இதில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணி 74 க்கு 72 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் கேரளா காவல்துறை அணியும் சென்னை டிஎன்பிஏ டேலண்ட் ரிசர்ச் வின் அணியும் மோதினர் இதில் 74க்கு 54என்ற புள்ளிக் கணக்கில் திருவனந்தபுரம் கேரள காவல்துறை அணி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழக அணியும் புனே கஸ்டம்ஸ் அணியும் மோதின இதில் புனே கஷ்டம்ஸ் அணி 93க்கு 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.மேலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் போட்டி தாமதமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.கூடைப்பந்து போட்டியை காண்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் கூடைப்பந்து ரசிகர்கள்,பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் போட்டியை கண்டுகளித்தனர்