பிரபல திரையரங்கில் வைத்திருந்த பப்ஸைபூனைசாப்பிடும் வீடியோ வைரல்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு திடல் அருகே சத்தியம் திரையரங்கு உள்ளது இங்கு தீராக் காதல் என்ற திரைப்படத்தை நேற்று காலை காட்சி பார்க்க சென்ற நபர் அங்குள்ள திரை அரங்கில் உள்ள கேண்டினில் வைக்கப்பட்டிருந்த பப்ஸை பூனை ஒன்று சாப்பிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் அந்த வீடியோவை ஸ்டேட்டஸில் பதிவிட்டனர் இதனையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நான் ஸ்டேட்டஸில் வைத்திருந்த வீடியோவை ரிமூவ் பண்ணுவதற்குள் அதிகமான பேர் பார்த்து விட்டனர் காலையில் திரையரங்குக்குள் நுளையும் பொழுது இந்த வீடியோ எடுத்தேன் இதை செய்தி ஆக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் நேற்று இரவு மீதமான பப்ஸை தூக்கி போடாமல் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை இடைவெளியின் போது கொடுத்த பப்ஸ் பிரஸாக தான் இருந்தது என்று தெரிவித்தார் இது குறித்து முன்று முறை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தொடர்பு கொண்டபொது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை இது குறித்து திரையரங்கு மேலாளரிடம் கேட்ட பொழுது அது இரவு வைத்திருந்த வேஸ்டான பப்ஸ் அதை எடுத்து வெளியில் கொட்டுவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்தார்tamilnaduTimesXP TamilUpdated: 29 May 2023, 11:44 am