லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது பொதுமக்கள் வரவேற்பு
1036 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புகழ்பெற்ற மலைப்பிரதேசமாகும் மேலும் உலக சுற்றுலா தலமாக இருந்தாலும்.. மருத்துவ வசதிகள் கொடைக்கானலில் குறைவு தான் .நாளுக்கு நாள் மருத்துவ வசதிகளை முன்னேற்றம் விதமாக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது . இதுவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில்.. கொடைக்கானலில் முதன்முறையாக லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. முதற்கட்டமாக ஆறு நோயாளிகளுக்கு தைராய்டு கட்டி அகற்றம் , கர்ப்பப்பை அகற்றம், குடலிறக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு லேப்ரோஸ்கோபிக் மூலமாக முதற்கட்டமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் இதற்கு முன்னர் வரை பெரிய அளவிலான மருத்துவ தேவை என்றால் தரைத்தளங்களில் உள்ள மதுரை , திண்டுக்கல் தேனி உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். தற்போது லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை கொடைக்கானலிலேயே துவங்கி உள்ளதால் இதனை கொடைக்கானல் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். முதற்கட்டமாக நடந்த 6 லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் நலமாக உள்ளனர்.. மேலும் இந்த அறுவை சிகிச்சையை இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சமூக நலப்பிரிவு தலைவர் மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன், டாக்டர் மருது பாண்டியன் தலைமையில் டாக்டர் .திரிலோக சுந்தர் உள்ளிட்ட ஆறு மருத்துவர்கள் இந்த லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை முதன்முறையாக கொடைக்கானலில் துவங்கி உள்ளனர். மேலும் இதே போன்று லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனையை அணுகலாம் எனவும் இந்த அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே பெறப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.