நாமக்கல் அருகே உயிருடன் இருக்கும் தாய்க்கு சிலை வைத்த மகன்!
வயதான பெற்றோரை கைவிடும் இக்காலத்தில் பெற்ற தாயுக்கு நாமக்கல் கூலிப்பட்டி சக்தி நகரை சேர்ந்த பிரபு (30) சிலை வைத்து மரியாதை செலுத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள கூலிப்பட்டியை சேர்ந்த பிரபு வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார் இவர் சிறுவயது கனவு நிறைவேற்றும் விதமாக தனது தாய்க்கு உலக பெற்றோர் தினத்தை போற்றும் வகையில் மார்பிள் கல்லால் ஆன 1.5 லட்சம் மதிப்பிலான சிலை வைத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து பிரபு கூறுகையில், எனது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். என்னையும் எனது தங்கையையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். வீட்டுக் வேலைகளை செய்து எங்களை தாய் காப்பாற்றினார் அவர் வீட்டு வேலைகளை செய்யும் போது நானும் உடன் செல்வேன் அப்போது அவரது கஷ்டம் எனக்குத் தெரியவில்லை நான் பெரியவனாகி வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட தொடங்கிய போது தான் தாயின் சிரமங்களை உணர்ந்தேன் அந்த சிரமங்களை பொருட்படுத்தாமல் உழைத்து எங்களை முன்னுக்கு கொண்டு வந்த தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் சிலை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.tamilnaduTimesXP TamilUpdated: 1 Jun 2023, 1:38 pm