பாதை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
1037 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் சடலத்தை தூக்கி செல்ல பொதுமக்கள் அவதிதிருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலிகுட்டை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்இப்பகுதி மக்களின் சுடுகாடு பயன்பாட்டிற்காக சுமார் ஏழு ஏக்கர் நிலம் இருந்தும் தற்போது ஆக்கிரமிப்பால் பயன்பாட்டில் 10 சென்ட் நிலமே உள்ளதாகவும் அந்த இடமும் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும்மேலும் வீட்டிலிருந்து சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து குண்டம் குழியுமாக உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்மேலும் சுடுகாட்டுக்கு செல்ல சாலை அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்இதனைத் தொடர்ந்து இன்று பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்த வெங்கட்ராமன் என்பவரது சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர் எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தலையிட்டு தங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.