முழு ஆண்டு தேர்வை தனி நபரின் வீட்டில் எழுதும் மாணவர்களின் அவலநிலை..செங்கம் அருகே தலைமை ஆசிரியர் ஒப்புதல் இன்றி பூட்டை உடைத்து பள்ளியில் இருந்த உபகரணங்கள் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்களை எடுத்து சென்ற அரசு ஒப்பந்ததாரர் முழு ஆண்டு தேர்வை தனி நபரின் வீட்டில் எழுதும் மாணவர்களின் அவலநிலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது இதில் அண்டபேட்டை பகுதியை சேர்ந்த 20 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர் அண்டபேட்டை கிராமத்திற்கு 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டதாக கூறப்படுகிறது புதிய பள்ளி கட்டிடம் கட்ட ஒப்பந்த பெற்ற அரசு ஒப்பந்ததாரர் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் இன்றி பள்ளியின் பூட்டை உடைத்து பள்ளியில் இருந்த உபகரணங்கள் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்களை எடுத்து சென்றுவிட்டு பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியினை துவங்கியுள்ளார் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பள்ளி வேலை நாட்களே முடியாத போது அரசு ஒப்பந்ததாரர் எவ்வித அறிவிப்பும் இன்றி பள்ளி கட்டிடத்தை இடித்ததால் மாணவர்கள் தனிநபரின் வீட்டில் அமர்ந்து முழு ஆண்டு தேர்வு எழுதி வருகின்றனர்இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அரசு ஒப்ந்ததாரர் அவசர அவசரமாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அனைத்து உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை எடுத்து சென்று விட்டார் மாலைக்குள் என்னிடம் ஒப்படைக்காவிடில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்