ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வியாபாரிகள் காய்கறி கொண்டு வரததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது!
1046 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தி லேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகளால் அதிக அளவு காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 80% சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வருகிறது. கேரளாவில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று வியாபாரிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இன்று ஒருநாள் மட்டுமே ரூ.5 கோடிமுதல் 6.கோடி வரை வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட்டில் அது முற்றிலும் பாதிப்படைந்து இன்று ஒருநாள் மட்டுமே ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்படைந்து உள்ளது. இதனால் மார்கெட்டில் பணிபுரிந்து வரும் சுமைதூக்கும் தொழிளார்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்தனர்