நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் தர்ணா போராட்டம்
1038 views
Subscribe தமிழ்நாடு videosநாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் புதிதாக சாலப்பாளையம் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு குழுவினர் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோரிக்கைகளை நிராகரித்து வந்தது. இதனால் விழா குழுவினர் நீதிமன்றத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி பெற்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்காமல் இருந்து வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஜல்லிக்கட்டு குழுவினர் இன்று நாமக்கல் அலங்காநத்தம் பிரிவு பகுதியில் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் திடீர் போராட்டத்திலும் தர்ணாவிலும் ஈடுபட்டனர். அனுமதியின்றி மாடுகளுடன் போராட்டத்திலும் தர்ணாவிலும் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.