மாபெரும் எருது விடும் திருவிழா-காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்தன!
1587 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா புத்துகோவில் பகுதியில் 4-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீ ஜனனி மோகன்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் தலைமையிலும் ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்தி, ஊர் நாட்டாமை சிவ சக்கரவர்த்தி மற்றும் ஊர் கவுண்டர் வெற்றிவேலன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 77778 இரண்டாவது பரிசாக 55555 மூன்றாவது பரிசு 44444 உட்பட மொத்தம் 33 பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர் மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.மேலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.