லாரி பாலம் உடைந்து மணல் லாரி தலைக்குப்புற தூக்கியதால் பரபரப்பு
1181 views
Subscribe தஞ்சாவூர் videosதஞ்சாவூர் கிழவாசல் பகுதியில் சின்ன அரிசிகார தெரு சிராஜுதீன்நகர் பழைய மாரியம்மன் கோவில் சாலை ஆட்டுமந்த தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன தஞ்சாவூர் ராமேஸ்வரம் பழைய பெரிய சாலை மிக முக்கியமான சாலை ஏராளமான பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான் தினமும் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிக்கு அலுவலகப் பணிக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது இந்த நிலையில் பெரிய சாலையில் பகுதியில் ஆதாம் வாய்க்கால்களில் புதிய பாலம் கட்டிய கடந்த சில நாட்களான நிலையில் இன்று அந்த வழியாக சென்ற மணல் லாரி பாலத்தின் மீது செல்லும்போது அப்போது பாலம் உடைந்து மணல் லாரி தலைக்குப்புற தூக்கியது இதனால் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி வழியாகத்தான் பல்வேறு பகுதிகளுக்கு நாங்கள் சென்று வருகின்றோம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது இன்று திடீரென பாலம் உடைந்து லாரி சிக்கி உள்ளது இந்த வழியாக தான் கல்லூரி பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றோம் இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை தரமற்ற பாலத்தின் காரணமாகத்தான் பாலம் உடைந்து உள்ளது உடனடியாக ஆய்வு செய்து நல்ல முறையில் பாலம் கட்ட வேண்டும் என பகுதி பொதுமக்களின் கோரிக்கை உள்ளது.