விபத்து எப்படி ஏற்பட்டது? திக் திக் அனுபவங்களை பகிர்ந்த பயணி!ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பயணித்த பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பயனியின் திகில் அனுபவங்கள்.பாபநாசம் வட்டம் இளங்கார்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பேரிடர் மீட்பு படையில் கல்கத்தாவில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊர் செல்வதற்காக இரண்டாம் தேதி ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்டார். இவரது ரயில் புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் விபத்தில் சிக்கியது. இவர் பேரிடர் மீட்பு படையில் பணியாற்றிய அனுபவத்தால் சக பயணிகளிடம் எந்தெந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி அவர்களை பத்திரமாக பாதுகாப்பாக கீழே இறக்கி உள்ளார்.மேலும் இந்த விபத்தில் சிக்கிய பலத்த காயமடைந்த பலரை மீட்டதாக இன்று இவர் சொந்த ஊர் திரும்பும் போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெரிவித்தார்.