தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை குறித்து மாணவர்களுக்கு உற்பத்தியாளர் பயிற்சி அளித்தனர்!
1144 views
Subscribe தஞ்சாவூர் videosஏப்ரல் மாதம் 18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தஞ்சை அருங்காட்சியகத்தில் தஞ்சையின் அடையாள சின்னமாக திகழும் தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை குறித்த பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். தலையாட்டி பொம்மை தயாரிப்பாளர்களான பிரபு மற்றும் அவரது மனைவி இணைந்து மாணவ, மாணவிகளுக்கு . சாக்கோ பவுடர், மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு ராஜா, ராணி தலையாட்டி பொம்மைகளை செய்து காட்டினார்கள். பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு தலையாட்டி பொம்மை விலை இல்லாமல் வழங்கப்பட்டது. மாணவர்கள் கோடை விடுமுறையை பயன் உள்ள வகையில் கழிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த தலையாட்டி பொம்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியாக இல்லாமல் ஒரு கைவினை தொழில் கற்றுக் கொடுக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவிகள் தெரிவிக்கும் போது கோடை விடுமுறை வெயிலில் வீணாக சுற்றாமல் பயனுள்ள வகையில் அதுவும் தஞ்சையின் பாரம்பரிய கலையை கற்றுக் கொள்வது தங்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் மாணவிகள்.